பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

152 தம்பிரான் தோழர் 18 குருக்காவூர் இன்னமுதத்தைக் கண்களால் பருகி வழி பட்ட தம்பிரான் தோழர் திருக்கழிப் பாலைக்கு1 இன்றார்". 4 வரு செடியேன் தீவினையில்" (7.23) என்ற செந்தமிழ்ப்பதிகம் பாடித் தொழுது ஏத்துகின்றார். இதில், எங்சேனும் இருந்துன் அடியேனுனை நினைந்தால் அங்கேவந் தென்னோடும் உடனாகி நின்றருளி இங்கேஎன் வினையை அறுத்திட் டெனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. (2) என்பது இரண்டாவது திருப்பாடல். பின்னர் நம்பியாரூரர் திருத்தில்லையை அடைந்து தில்லைச் சிற்றம்பலவன் திருக்கூத்தினைக் கண்ணாரக் கண்டு களித்துக் கும்பிட்டு எல்லையிலா இன்பத்தில் திளைத்து மகிழ்கின்றார் (பதிகம் இல்லை). பின்பு திருத்தினை நகரை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் சிவக் கொழுந்தைப் பணிந்து போற்றித் (பதிகம் இல்லை}-இஃது இரண்டாம் முறை வருகை) திருநாவலூரை அடைகின்றார். அங்கு அடி யார்களுடன் அப்பதியில் இனிது அமர்கின்றார்: (இங்கிருந்து தான் தொண்டை நாட்டுத் திருத்தலம் பயணம் தொடங்கு கின்றது). ஐந்தாம் நிலை தொண்டை நாட்டுத் தலவழிபாட்டைக் முடித்து கொண்டு (ஒற்றியூரிலிருந்து திரும்பும்போது] சங்கிலி 18.இருக்கழிப்பாலை : சிதம்பரத்திலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. பழைய தலம் கொள்ளிடந்தி வெள்ளத்தில் போய் விட்டது. இப்போதுள்ள கோயில் நெல் வாயிலில் (சிவபுரி) ஒரு தனிக் கோயி லாக உள்ளது.