பக்கம்:தம்ம பதம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 ☐ தம்ம பதம்

266. அறிவில்லாது மூடனாயிருக்கும் ஒருவன் மெளனத்தினால் மட்டும் முனிவனாகிவிட மாட்டான்; ஆனால் தராசு பிடித்து நிறுத்துப் பார்த்து நன்மையை மட்டும் மேற்கொண்டு, (13)

267. தீமையை விலக்கும் ஒருவனே முனிவனாவான், அந்தக் காரணத்தாலேயே அவன் முனிவன். இந்த உலகில் இரண்டு பக்கத்திலுள்ளதையும் எடை போட்டுப் பார்ப்பவனே முனிவன். (14)

268. உயிர்ப் பிராணிகளை ஹிம்சை செய்வதால், ஒருவன் உயர்ந்தவனாக மாட்டான்; உயிர்ப் பிராணிகளைத்துன்புறுத்தாததாலேயே அவன் உயர்ந்தவன் எனப்படுவான். (15)

269. கட்டுப்பாடான ஒழுக்கத்தாலும், திடசங்கற்பத்தாலும், அதிகக் கல்வியறிவாலும், சமாதிநிலையாலும், ஏகாந்தமாய் வசிப்பதாலும் மட்டுமே- (16)

270. உலகத்தார் அடைவதற்கு அரிய நிருவாண இன்பத்தை நான் அடைந்துவிட முடியாது. ஒ பிக்கு! ஆஸவங்களை அழிக்கும் வரை திருப்தியுடன் அயர்ந்திருக்கலாகாது! (17)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/66&oldid=1358605" இலிருந்து மீள்விக்கப்பட்டது