பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

饥8 க. சமுத்திரம் நேராகப் பாத்ததில், அப்படிப் பார்க்கப்பட்டவர்கள் பாவம் செய்தவர்கள்போல், தலைகளை குனிந்து கொண்டார்கள். தலைமை குமாஸ்தா சோணாசலம், ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும்போது, அலுவலகத்திற்கு அப்போதுதான் வந்த அக்கெளண்டன்ட் கந்தரம், தான் லேட்டாக வந்ததற்கு, மற்றவர்கள்தான்,வருத்தப்படவேண்டும் என்று நினைத்தவன்போல், மதர்ப்புடன், அடிமேல் அடி வைத்து நிதானமாக நடந்து வந்தான். தலைமைக் குமாஸ்தா, தான் அறிமுகப்படுத்திக் கொண்டிந்த டைப்பிஸ்ட் பெண்ணை, அம்போ' என்று விட்டுவிட்டு, கந்தரத்தைப் பார்த்தார். அவனை, முதலில் அறிமுகப் படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் திட்டுவான். “ஹறி ஈஸ். சுந்தரம். ஸார்” என்றார்சோணாசலம்."கிளாட் டுமீட் யூ மிஸ்டர். சதாசிவம்” என்று சொல்லிக் கொண்டு, கந்தரம் மானேஜர் சதாசிவத்தின் கரங்களைக் குலுக்கினான். எல்லோரும் 'ஸார் போடுகையில், இவன் மட்டும் மிஸ்டர் என்று போட்டதை சதாசிவம் கவனிக்கத் தவறவில்லை. அதோடு, அவன் பேசிய தோரணை, அவன் என்னமோ மானேஜர் மாதிரியும், தான்தான் அக்கெளண்டண்டாக வந்திருப்பது போலவும் நினைப்பதாகத் தோன்றியது. முதியவர்கள்கூட, பதவிக்குரிய மரியாதையைக் கொடுக்கும்போது, சம வயதுள்ள ஒருவன், 'ஆப்டர்ஆல் ஒரு அக்கெளண்டண்ட் நடந்து கொண்ட விதம், மானேஜருக்குப் பிடிக்கவில்லை. ஆகையால், இந்த இடத்தில், ஏதாவது பேசி, தனது கப்பீரியாரிட்டியை காட்டியாக வேண்டும். காட்டினான். "கிளாட்டு மீட் யூ ஆல். ஒர்க் ஈஸ் காட். உங்களுக்கு, எந்த பிரச்சினை என்றாலும். என்கிட்ட வரலாம். பட். டிஸ்ஸிபிளின் இஸ் ரொம்ப முக்கியம்... நான்... லண்டன்ல பிஸினஸ் அட்மினிஸ்டிரேஷன் கோர்ஸ். படிக்கும் போது. அங்கே ஒரு சம்பவத்தை சொன்னாங்க. அங்கே ஒருவர்.'