பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுக்குள் இரண்டு 炒9 அலுவலக ஊழியர்கள் அனைவரும் மானேஜர் விளக்கப்போகும் சம்பவத்தை அறியத் துடிப்பவர்கள்போல், கண்கொட்டாமல், அவர் வாயையே பார்த்தார்கள். அதிலே சில பாவலாப் பேர்வழிகளும் இருக்கலாம். ஆனால், அக்கெளண்டண்ட் கந்தரம், அலட்சியமாக மேலே ஒடும் மின்சார விசிறியைப் பார்த்தான். பிறகு கையில் வைத்திருந்த ஒரு பத்திரிகையை அலட்சியமாகப் புரட்டினான். இந்த அலட்சியத்தை மானேஜர் சதாசிவம் லட்சியம் செய்ததுபோல், கோபமாக கேட்டான். லேட்டாய் வருகிறவர்களை டிஸ்மிஸ் பண்ணிடுவேன். தாமதமாக வருவது ஒரு சமூக விரோத செயல்" என்று பேசிக்கொண்டே போனான். ஊழியர்கள், அவருக்குப் பயப்படுவதுபோல், தத்தம் கைகால்களை ஆட்டிக் கொண்டார்கள். கந்தரம் மட்டும் ஒனக்கு ஒரு திறமை இருந்தால். எனக்கும் ஒரு திறமை இருக்கு. நீ என்ன சொல்றது. நான் என்ன கேட்கிறது என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டே, அலட்சியமாக பத்திரிகைக்குள் தலை நுழைத்தான். மானேஜரின் பார்வை, அவன்மேல் அடிக்கடி விழுவதை ஊழியர்களும்பார்த்துவிட்டார்கள்.மானேஜர் சதாசிவம்'அட்வைஸ்' முடித்துவிட்டு, தனது ஏர்கண்டிஷன் அறைக்குள் போய்விட்டான். அவனை எப்படிமடக்கலாம் என்றுமானேஜரும், ஆசாமி மீது எப்படி ஒரு வழி செய்யலாம் என்று அக்கெளன்டன்டும் நினைத்துக் கொண்டதால் அன்று இருவருமே எந்த பைலையும் பார்க்கவில்லை. இரண்டு மூன்று நாட்கள் ஓடின. அக்கெளன்டன்ட் கந்தரம், தான் நடந்து கொண்டதற்கு வருத்தப்பட்டான். என்ன இருந்தாலும் எவ்வளவு திறமை அவனிடத்தில் இருந்தாலும், அவன் மேனேஜருக்கு கிழே வேலை பார்ப்பவன். ஆகையால், அடுத்த தடவை புதிய மானேஜரைப்