பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமார்க்கும் குடியல்லோம் 17 விடமாட்டேன்னு சொன்னதாய் மட்டும் சொல்லாதீங்க. மொட்டைக் கடுதாசி. அழகில்லை...இப்படி எதையாவது சாக்குப் போக்கா சொல்லுங்க... இதோ எங்கப்பாவே வந்துட்டார். நீங்களே சொல்லுங்க.." - பேச்சின் கடைசி வார்த்தைகளை, ரகசியமாகவும் ஆழமாகவும் சொன்ன வேதா, அந்த டெலிபோன் குமிழை மேஜையில் கிடத்திவிட்டு, முகப்பறைக்கு வந்து கதவைத் திறந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு நின்ற தந்தையிடம் பற்றற்றக் குரலில் - அதே சமயம் பாரம் விலகிய ஆறுதலில் சொன்னாள்: “எப்பா - உங்ககிட்ட யாரோ பேசணுமாம். லைன்ல இருக்காங்க” - செம்மலர் - 1980 ©