பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18 பட்டியலுக்குப் பெருமை தரட்டும்; ஆல்ை இந்த "நடமாடும் தெய்வம் முதல் ஐந்தாண்டுத் திட்டத் கிலோ, அல்லது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலோ கோயில் கொண்டால், அது அந்தத் திட்டத்தின் பிறந்த வேலைதான்! இன்னும் கேளுங்கள்: கதையை எழுதித் தொலைத்து பத்து பைசா தபால் தலையை வேறு அழுது பெட்டிக்குள்ளே திணித்து, அந்த வினுடியிலிருந்து தபாலாபீஸிலேயே பழிகிடக்கும் இரண்டாவது பிரம்மாக்களுக்கு'கடல் தண்ணியை முழுக்கத் தாண்டி, நல்லபடியா கடுதாசி எம்மவன் கைக்கு எட்டணுமே, காளி ஆத்தா!' என்று தபால் பெட்டிக்குச் சூடம் சாம் பிராணி காட்டும் உலகம றியாக் குப்பண்ணன் களுக்கு-நாய்கள் ஜாக்கிரதை' என்ற எச்சரிக்கைப் பலகையின் குடை நிழலிலே எழுந்தருளி, க்யா பாத் ஹை ? என்று விசாரிக்கும் படே ஆத்மி'களுக்கு இந்தத் தோழர், பேதம் கருதாத மணிப் பிரவாள நடையில் பதில் சொல்லும் பாணியே அலாதிதான், போங்கள்! இவர் வருவிப்பது இன்ப மொழியாக இருக்க லாம், இழவுச் சேதியாகவும் இருக்கலாம். சில சமயம் இன்னுெருவருக்காக வேண்டி வசவு' வாங்கும் தடுப்பு ஆயுத மாகவுங்கூட இவர் திரு. அவதாரம் எடுப்பதுண்டு. தில்லைப் பெருவெளியிலே ஆனந்த நடனமிடும் பெருமான் காலடி எடுத்து வைக்கும் போதெல்லாம்