பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 க. சமுத்திரம் வெளியே ஒரு போலீஸ்காரரால் முக்காடு விலக்கப்பட்டு, இன்னொருவரால் முகத்தை மறைத்த கை விலக்கப்பட்டு செத்துப்போனவள்போல் விறைத்து நின்ற அவளைப் பார்த்தாள். அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை. மறுபிறவி எடுத்தவள் போல் கர்ஜித்தாள்: "இன்ஸ்பெக்டர் ஸார் அந்தப் பெண்ணை என் வீட்ல விட்டுட்டுப் போங்க...” தலையில் இருந்து தொப்பியை, அதிர்ச்சியின் அடையாளமாக கையில் எடுத்துக் கொண்டே, இன்ஸ்பெக்டர் கேட்டார். "என்னம்மா நீங்க? என்ன சொல்றோமுன்னு புரிஞ்சுதான்." "புரிஞ்சுதான் பேசறேன் சார். இவள் என்னோட சம்மதத்தோடுதான் அவரோட தொடர்பு வச்சிருக்காள். இவள் தொடர்புக்கே நான்தான் காரணம்: 'கம்மா இரும்மா.இவள் செய்தது.விபச்சாரம்.விபச்சாரத்தடை சட்டத்தின் கீழ். "அப்படின்னா நானும் குற்றவாளி. விபச்சாரத்தைத் தூண்டிவிட்ட குற்றவாளி நான். என்னையும் போலீஸ் எபிடேஷனுக்குக் கொண்டுபோங்க. அப்படிக்கொண்டு போறதாய் இருந்தாலும் காலையிலதான் கொண்டு போகலாம். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல பெண்களை போலீஸ் ஸ்டேஷன்ல வைக்கக்கூடாதுன்னு உத்தரவு இருக்கிறதாய் பேப்பர்ல படிச்சேன்: இன்ஸ்பெக்டர் கொதித்தார். டேய் கோவிந்தா ஒன்தங்கச்சி பேசுறதைப் பார்த்தியாய்யா? இவள் இப்படி இருந்தால் அவன் எப்படி இருப்பான்? நம்ம டிபார்ட்மென்ட் நண்பனோடதங்கையாச்சேன்னுகம்மா இருக்கேன். இல்வன்னா...'