- 4 -
நூலாசிரியர் உலகியல் தன்மைகளை மிகவும் நுணுக்கமாக நோக்கி
விளக்கியுள்ள திறம் போற்றத்தக்கதாகவுள்ளது . சோறுகா னா தான் சுதந்திரமும் சோறிருந்தும் பேரகா ாைதான் பெருமிதமும் - பேறிருந்தம்
விறகானாதான் விக்சிதமும் iறிருந்தும்
ஆறுகா னாதான் அவம் (1.2 : 3)
குடல்பசியை யாற்றிக் கொள்ளக்கரும்; கடின் o உடன்பசியை யாற்றிக் கொ#ளக்கூடும் - கடல்ப சிபோல்
போது மெனக் கறாப் பொருள்பசியை யாறிவது - - -
நீதமெனக் கூறும் நிலை (1.2 : 9)
மேற்கண்ட வெண்பாக்கள் உலகியல் சிந்தனை வயப்பட்டசெய்திகளை விளக்கும் தன்மையுடைய இவரது பாக்களுக்கோர் காட்டுக்களாம்.
கவிஞரின் தமிழ்ப் பற்றினை இந்நூ லில் காணலாகும் பல பாடல்கள் பறைசாற்றுகின்றன.
அமிழ்ததனை யாராதா ரென்ன, அருமைத் தமிழ்திறனை யோராது தாழ்ந்தார்." (43 - 1)
என்ற அடிகள் அவர் தமிழின்பால் கொண்டுள்ள காதலைப் புலப்படுத்த வல்லன. உரிய இடங்களில் பழமொழிகளையும் கதைக் குறிப்புக்களையும் பயன்படுத்தி வெண்பாக்களை யாத்துள்ளார் . தான் எடுத்துக்கொண்ட கதைக்கேற்ற
வகையில் நிகழ்ச்சிகளை அமைத்து எளிமையான தெளிந்த நீரோட்டமாகத் தலைவன் எணம் இப்பாவியத்தை நடத்திச் செல்கிறார்.
முடிவாகக் கூறுவமாயின் தலைவன் எலும் இந்நூ லிவழி இன்றைய
உலகுக்குத் தேவையான கருத்துக்களான சமத்துவம், சகோதரத்துவம் , சுதந்திரம் எலும் மூன்று நிலைகளை மக்கள் உள்ளபடியே துய்த்திட வேண்டுமாயின் சமுதாயத்தில் அமைதி நிறுவ வேண்டும் . அந்த அக்க அமைதி நிலவிட ஊறுவிளைவிக்கும் சக்திகளைக் களைந்த மக்கள் நன்னெறி நிற்க வேண்டும். அந்த நெறியைப் பற்றிட அவர்களுக்குத் தேவை ஆன்றோர்கள் விட்டுச் சென்ற அரும்பெரும் கருத்துக்கள் . அக்கருத்துக்களைத் தொகுத்து கதையோட்டத்துடன் ஆசிரியர் பாவியமாக்கியுள்ளார். இந்நூ ல் இருபதாம் நூற்றாண்டில் தோன்றியுள்ள வெண்பா இலக்கியங்களில் குறிக்கத்தக்கனவாகக் திகழ்கிறது .