பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 8 - தாத்தாவும் பேரனும்

முந்தி அல்ல-நீ சுடவேண்டும். அதன் தலையை நோக்கி குண்டு எறி. ராபின் குருவியைச் சுடுவதாகவே எண்ணிக்கொள். உன் கண் முன்னால், நல்ல குறிக்கு இலக்காக அதன் தலை விளங்குகிற போது அதனுடைய இறைச்சியைப் பாழடிப்பதில் பயனில்லை. இதோ வருவது உன்பாட்டிக்காக. இப்போது அமைதியாக இருந்து கவனி. ’ -

உதயத்தில் அது வந்தது. உடனே தாத்தா தன் ஊதுகுழலை வெளியே எடுத்தார், மங்கலான வெள்ளொளியில் அவர் அதில் சில வேலைகள் செய்தார். பிறகு வான்கோழிப் பண்ணை ஒன்றின் சொந்தக்காரர் போல் அவர் குரல் எழுப்பினர். தன் தோழனைத் தேடி அலேயும் பெட்டை வான்கோழி போல் அவர் ஆசைக் கிளுகிளுப்பு கூவினர். பெட்டையை நாடிக் கூவும் ஆண் பறவை: ப்ோல் கத்தினர். அப்புறம் வாயை மூடிக்கொண்டு, மறுகுரல் எழுப்பாமல் இருந்தார். வான்கோழிக் கூச்சலை ஒலிபரப்புகையில் நாம் வரம்பு கடந்துவிடக் கூடாது என்று பின்னர் அவர் என்னிடம் சொன்னர். எதிர்க்குரல் தரக்கூடிய வான்கோழி ஏதாவது அருகிலிருந்தால், அது அவசியம் வந்துவிடும்.

பல வருஷங்களுக்குப் பிறகு, நான் செம்புலி வேட்டையில் பதுங்கியிருந்தது உண்டு. அது உணர்வுக் கிளர்ச்சி அளிக்கக் கூடியதுதான். ஆயினும் வான்கோழிகளுக்காகக் காத்திருப்பது போல் கடுமையானது அல்ல. வான்கோழிகள் பறந்து வரவில்லை. குறுகிய சந்துகளுக்குள் மூடுபனி பாய்வதுபோல், அவை ஆவிகள் மாதிரி ஊர்த்து வந்தன. முதலில் அவை அங்கே காணப் படுவதில்லை. பிறகு, பசுமாடுகள் மாதிரிப் பெரியதாக அவை அங்கு தோன்றுகின்றன. சிறிய வழி ஒன்றிலிருந்து அவை ஒன்றின் பின் ஒன்றாக வெளிப்பட்டன. முதலில் பெட்டைக் கோழிகளும், பிற்கு முதிராத ஆண் பறவைகள் சிலவும் வந்தன. அப்புறம், பல பெட்டைகள், கடைசியாகத் தலைவன்.

அவை விலகிப் பரவி, மெதுவாக எங்களை நோக்கி நகர்ந்தன. டாமும் பீட்டும் முன்னதாகவே அந்த இடத்தில் நிறைய தானி யங்களேச் சிதறிவைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இப்பொழுது ஏற்படுகிறது. வேட்டையை வசீகரிக்க இரை உபயோகிப்பது சட்டபூர்வமானது தான். ஒருவேளை, அப் பறவைகள் பைன்மரச் சிதறல்களைத் தின்றிருக்கவும் கூடும். அது எப்படியிருப்பினும் எனக்குக் கவலையில்லைதான். தலைவனை அந்த ஆண் வான்கோழியையே நான் கவனித்துக் கொண்டிருந் தேன். அது தன் வால் பகுதியை பெரிய விசிறி போல் பரப்பியது. மாதாகோயில் மணி போல் ஒலித்த பேரோசையை எழுப்பியது. தன்னைச் சுற்றிலும் கர்வமாகப் பார்த்தது. சுற்றுவட்டாரத்தி லுள்ள எந்த ஆளுவது தன் மனைவிமாரில் எதையாவது பார்த்துச் சிறு ஜாடை செய்யட்டும் தலைவனை தானே அதை உடல் வேறு இறக்கை வேருகப் பிய்த்தெறியத் தய்ார் என்று சவாலிட்டது.