பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5
ஸோலோஹெட்பக்


அரசர்களுக்கு வரிப்பணம் எவ்வளவு அவசியமோ புரட்சிக்காரருக்கு அவ்வளவு அவசியமான பொருள் வெடிமருந்து. தான்பிரீன் முதலானவர்கள் அதைத் தேடுவதில் முதலில் கருத்தைச் செலுத்தினர். 1919 ஜனவரி ஆரம்பத்திலேயே ஸோலோஹெட்பக் கல்லுடைக்கும் பாசறைகளுக்குப் பக்கம் வெடிமருந்து கொண்டுவரப்படும் என்று செய்தி அவர்களுக்கு எட்டியது. ஆனால் வெடிமருந்து வண்டியுடன் அதன் பாதுகாப்புக்கு ஆயுதம் தாங்கிய போலிஸ்காரர்களும் வருவார்கள். வெடிமருந்து வேண்டுமானால் அவர்களிடமிருந்து அதைப் பறிக்கத்தான் வேண்டியிருந்தது. தான்பிரீனும் ஸீனும் இதைப்பற்றி அடிக்கடி கலந்துபேசினார்கள். அவர்களிடம் ஆட்கள் அதிகமில்லை. ஆனால் இருந்த சிலரோ மிகுந்த தைரியசாலிகள். அச்சிலரை வைத்துக்கொண்டு விரைவாக மருந்துக் காரியத்தை முடிக்காவிட்டால் வெளியிலுள்ள மற்றத் தொண்டர்களும் உற்சாசங் குன்றிக்கிடப்பார்கள்.

எதிரிகளோடு நேராக நின்று இடைவிடாது போராடமல் மறைந்து நின்று சமயம் வாய்த்தபோதெல்லாம் எதிரிகளைத்தாக்கிவிட்டு மீண்டும் மறைந்து கொள்வது கொரில்லச் சண்டை என்று சொல்லப்படும். 'கொரில்லா என்பது மனிதக் குரங்கு, அது இப்படித்தான் சண்டை செய்வது வழக்கம்.[1]


  1. நூலாசிரியரின் இக் கருத்து பிழையானது கொரில்லாக் குரங்குக்கும் இவ்வகைச் சண்டைக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. கிரமப் படைகளுக்கு (Regular Army) எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்தும் போராட்ட முறையின் பெயர் கெரில்லாப் போராட்டம் (Guerilla warfare) ஆகும். இது முதன் முதலாக ஸ்பெயின் நாட்டில் உருவாயிற்று நூலாசிரியர் அதனை கொரில்லாக் குரங்கின் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தி இங்கு எழுதுவதால் 'கொரில்லாச் சண்டை' என்று அவர் பயன்படுத்திய சொற்றொடர் இங்கு மட்டும் அப்படியே தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. நூலில் இதற்கு முன்பும் பின்பும் உள்ள பகுதிகளில் 'கெரில்லாச் சண்டை' என்று திருத்தப்பட்டுள்ளது -பதிப்பாளர்

56