பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு 95

அப்போது அவர்களுடைய வாழ்க்கைக்குப் புதிய இன்பம் ஊட்ட மக்கள் பிறக்கிருர்கள். இறைவன் அமைத்திருக்கும் கியதியின் உயர்வை என்னவென்று சொல்வது! தான் ஒருவகை இருந்தவன் மனேவியை அடையும்போது அவனது கினேவும் அன்பும் அவளைப் பற்றிச் சென்று படர்கின்றன. அப்பால் குழந்தை கள் பிறந்தால் அங்த அன்பு பின்னும் விரிகிறது. தாய் தங்தையருடைய தளர்ச்சியைப் போக்க மக்கள் பிறக் கிருர்கள். அதுமட்டும் அன்று; நாம் இன்பம் நன்கு நுகர்ந்தோம். உடல் தளர்ந்தோம். இனி வாழ்வில் என்ன இருக்கிறது?’ என்ற எண்ணம் வராமல், மக் களைப் பேணும் இன்பமும், அவர் அறிவுடைய ராதலேக் காணும் இன்பமும், அவர் நல்வாழ்வு பெறு வதைப் பார்க்கும் இன்பமும் இல்வாழ்க்கையில் அமை கின்றன. ஆகவே, புதல்வன் இல்வாழ்க்கையின் தளர்ச்சியினல் தோன்ற இருக்கும் வெறுப்பைப் போக்குபவனுக இருக்கிருன். -

இங்கே, முல்லே மலேந்து அமர்ந்திருக்கும் அரிவை யோடு இனிது வீற்றிருக்கும் நெடுந்தகைக்கு வாய்த்த புதல்வனும் அத்தகையவன்தான். அவர்களுக்கு இல் வாழ்க்கையில் துனி (வெறுப்பு) வராமல் தீர்க்கும் ஆற் றலுடையவனக இருக்கிருன். அவன் தனியாக ஒன் றும் செய்யவேண்டியதே இல்லை. பிறந்து மொழி பயில்வதே போதும்; அவர்களுக்கு இல்வாழ்க்கையில் வெறுப்புத் தலைகாட்ட இடம் இல்லே.

தன் மனைவியும் மகனும் உடன் இருக்க, நிலச வொளி படர்ந்த அந்த முற்றத்திலே தலைவன் விற்