பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 தாமரைப் பொய்கை

ரைப் பூ இருப்பது போல் ஆகுமா? வேறு பூ ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் தாமரை ஒன்று இருந்தாலே போதுமே! பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை அல்லவா? தமிழர்கள் தாமரையைக் கடவுட்பூ என்று போற்றுவார்கள். தாமரைதான் அங்தப் பொய்கைக்கே சிறப்பைத் தருவது; அருங்கலமாக, அணியாக இருப் l–1.gif.

தோழிக்குத் தலைவனுடைய ஊர் நினைவுக்கு வங் தது. இங்கே இவள் ரோடுகிருள். திருமணம் ஆன பிறகு தலைவர் இவளேத் தம் ஊருக்கு அழைத்துச் செல் வார். தம் இல்லத்துக்கு அரசியாக இவளே வைப்பார். அங்கும் இத்தகைய தாமரைப் பொய்கை இருக்கும். நீராடும் துறைகளிலே தாமரையை உடைய ஊர் அது. அந்தப் பொய்கையிலே இவள் ரோடுவாள். தாமரைத் தண்டுறை ஊரன் என்று புலவர் பாடும் புகழுடையவர் இவள் காதலர்."

சட்டென்று அவள் நினேவு மாறியது. இன்னும் அவர் இவளேத் திருமணமே செய்து கொள்ளவில்லையே! அவர் இல்லம் வெறும் பொய்கை போலல்லவா இருக் கிறது? அவர் ஊர்ப் பொய்கையில் தாமரை இருக்கிறது. ஆனல் அது அரும்பாக இருக்கிறது. அது மலர்ந்து விளங்க வேண்டாமா? வெறும் பொய்கை மாத்திரம் இருந்தால் சிறப்பு இல்லே. அதில் தாமரை இருக்க வேண்டும், காதலர் தம் இல்லத்துக்குரிய தாமரையைப் பெற்றிருக்கிருர். ஆனல் முகையாக உள்ள அந்தத் தாமரை, முகைந்த பூ, விரிய வேண்டாமா? யாவரும் தாமரையின் அழகை மொட்டாக இருக்கையில் உணர