பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைப் பொய்கை . . - 19

முடியுமா? அது விரிந்து மலர்ந்தால்தானே உணரலாம்? இவளைத் தன் மனேவியாக ஏற்று இல்வாழ்க்கையைத் தொடங்கில்ைதான் இவள் பெருமையை யாவரும் உணர்வார்கள். இவர்கள் இல்வாழ்க்கை மலர்ச்சி பெற்று விளங்கும்.'

இப்படித் தாமரைப் பொய்கையை உவமையாக வைத்துத் தலைவன் இல்லத்தையும் தலைவியையும் எண் னிய தோழி தலைவனுடைய ஊர்ப் பொய்கையைக் கற்பனை செய்து பார்த்தாள். அவள் எண்ணத்துக்கு ஏற்றபடிதானே அந்தக் கற்பனை இருக்கும் மிகவும் விரிவான பொய்கை அது; மலர்ந்த பொய்கைதான். தாமரை இருக்கிறது. யாவரும் நீராடும் துறையும் இருக் கிறது. தாமரைத்தண் துறை என்று சொல்வதில் தவறு இல்லை. ஆனல் மலர்ந்த தாமரையைக் காணவில்லே. முகைப் பருவத்தில் உள்ள தாமரையைத்தான் அவள் கற்பனைக் காட்சியில் காண்கிருள். முகைந்த தாமரைத் தண்டுறையை அவள் அகக் கண்ணில் நிறுத்துகிருள்.

'இது மலர்ந்த தாமரைப் பொய்கை ஆகவேண் டும் என்பதே அவள் ஆசை.

நிராடினர்கள். வீட்டுச்குச் செல்லப் புறப்பட் டார்கள். பொய்கைக் கரையில் உள்ள சிறிய கோயி லுக்குச் சென்ருர்கள், வழிபட்டார்கள். தோழிக்கு இப் போது ஒரு யோசனே தோன்றியது. இவள் ஒரு கவலையும் இல்லாதவள் போலப் பேசிள்ை. ஆனாலும் மனசுக்குள்ளே கவலே இருக்கலாம். அதையும், கண்டு பிடிக்க வழி ஒன்று பண்ணவேண்டும் என்று எண்ணி ள்ை. 'கடவுளிடம் கம் வேட்கையை விண்ணப்பித்துக்

தாமரை-3