பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறக்கம் கெடுத்தவள் 'ss

குரிய பொருளை ஈட்டுவதற்கு ஆடவர் வேற்றுாருக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்தத் தில் வனும் வங்திருக்கிருன். தானும் காதலியும் களவில்ே ஒன்று படுவதைச் சிறிது சிறுத்தி, வரைந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்தை இடையிலே வைத்து அதற்குரிய பொருளுக்காகப் பிரிந்து வந்திருக்கிருன், !

வரைவு இடை வைத்துப் பொருள் வயிற் பிரிந்து வந்துள்ள இந்தத் தலைமகன், தலைவியைக் காணுத தற்கு முன்பு தனியே வாழ்ந்தான். அக் காலத்தில் அந்தத் தனிமை அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்க வில்லை; இயற்கையாக இருந்தது. ஆனல் தலைவியோடு அன்பு செய்து பழகிய பிறகு அவளேப் பிரிந்து வாழும் ஒவ்வொரு கணமும் அவனுக்குத் துன்பம் தருவதாத் இருக்கிறது.

இங்கே வந்த சில நாளாக அவளைக் கான முடியாத நிலையில், சிறைப்பட்டவனைப்போல அவன் இருக்கிருண். பொருளின்பொருட்டு அவன் தானே மேற்கொண்ட சிறை இது. உலகத்தோடு ஒட்ட் ஒழுகுவதுதான் கற்ருேர்க்கு அழகு. ஒருவன் தான். விரும்பிய காதலிக்கு வேண்டிய பரிசம் வழங்குவது மரபாகிவிட்டது. அதை அக் காதலி விரும்பவில்லே, அவள் விரும்புவது ஒன்றே; அவனுடைய அன்பென் லும் ஒன்றைத்தான் அவள் விரும்பினள். ஆனல் அவ ருடைய சுற்றத்தார், "என்ன பரிசம் வழங்குவீர்கள்? என்று கேட்பார்களே! அது வழிவழி வந்த பழக்கமாகி விட்டது. அதல்ை நல்லவர் மதிக்கவும் தலைவியின் சுற்றத்தார் கொண்டாடவும் முறையறிந்து பரிசம்