பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

غن-ختق

உறக்கம் கெடுத்தவள் 5T

பிடித்து அதை விற்று வயிறு வளர்க்கும் வலேஞர்கள் அல்ல. சங்குகள் நிரம்பியது கடல், அந்தச் சங்குகள் கடலின் ஆழத்தில் முத்துக்களைத் தம் அகத்தே பொதித்து வாழ்கின்றன. இந்தப் பரதவர் முத்தைத் தரும் சங்குகள் எத்தனை ஆழத்திலே இருந்தாலும் அஞ்சாமல் சலியாமல் சென்று மூழ்கி அவற்றைத் திரட்டி எடுத்து வருவார்கள். அவற்றில் உள்ள முத்துக்களே எடுத்து நகரங்களில் விற்பார்கள். முத்து வியாபாரம் எவ்வளவு சிறந்த தொழில்!

முத்தைப் பரதவர் விலை பகர்ந்து விற்பனை செய் வதற்கு உதவியாக இருப்பது கடல். அந்தக் கடல் கெழு கொண்கனுடைய அன்புக்குரிய இளைய மகள் இந்தத் தலைவனுடைய காதலி. அந்தப் பரதவர் மூழ்கி எடுத்துக் கைக்கொள்ளும் முத்து உயர்ந்த பொருள்; பொன்னேடும் மணியோடும் சேர்ந்து அணிகலன் களிலே பொலிவு பெறுவது. அந்த நிலத்துத் தலே மகனிடத்திலும் ஒரு முத்து இருக்கிறது. அது ஈடும் எடுப்பும் இல்லாத முத்து அழகே வடிவான முத்து: எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்துக்கு ஒளியைத் தரும் முத்து; யாவரும் எளிதிலே பெ வதற்கரிய முத்து தலைவியாகிய முத்து. ."

பரதவர் முத்தை விற்கிருர்கள். தக்க விலே கொடுப் பவர்கள் அவர்கள் எடுத்த முத்தைப் பெறுகிருர்கள். கடல் கெழு கொண்கனும் தன் மகளைப் பிறருக்குத் தருபவன்தான். தக்க வில் கொடுப்பாருக்குத் தருபவன். அந்த முத்தை இப்போது இந்தக் காதலன் பெற்றுக் கொண்டுவந்து தன் இல்லத்திக்கு அணி யாக்கிக் கொள்ள் கனத்திருக்கிருன்...அந்த முத்துக்கு