பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுஇெருெ 73

புதர்கள் உள்ளன. அடர்ந்து உயர்ந்த புதருக் குள் பெண்யான குட்டி போட்டிருக்கும். நெடும் புதரில் கானத்து வாழும் மடப்பிடி ஈன்ற குட்டி பிறந்தபொழுதே கடக்கும். ஆனல் அது நடுங்கி கடுங்கி நடக்கும். அந்த இளங்கன்றை இரை யாகக் கொள்ளவேண்டுமென்று புலிக்கு காவில்ர்ே ஊறும். பிடி இருக்கும்போது ஏதாவது செய்தால் அது பிளிறும். அது கேட்டுக் களிறு வந்துவிடும் அது புலியை எளிதில் விடாது. புலிக்கும் களிற்றுக் கும் போர் மூண்டால் எது வெல்லும் என்று சொல்லமுடியாது. களிறு தன் கொம்பினல் புலியைக் குத்திக் கொல்வதும் உண்டு. புலி அப்படிச் சண்டை போட விரும்பாமல், ஒளிக் திருந்து சமயம் பார்த்து இரையைத் தட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கும்.

தலைவி : புவி வலிமையுடைய விலங்காயிற்றே:

தோழி இருந்தால் என்ன உலகத்தில் ஆண்மையும் ஆற்றலும் உடையவர்கள் எவ்வளவு பேர் இப்படி மறைந்து இன்பம் தேடுகிருர்கள்?

தலைவி : மனிதருக்குள்ளும் விலங்குத் தன்மை படைத்தவர்கள் இருக்கிருர்கள் என்பது உண்மை தான். - தோழி : உண்மையென்று ஒரு முறை சொன்னல் போதாது. முக்காலும் உண்மை. குறுங்கையிரும் புலியாகிய கொலேத் தொழிலிற் சிறந்த ஆண்