பாலே குளிர்ந்தது 79
கரிய கூந்தலும் புன்முறுவல் பூத்த முகமும் அவன் உள்ளத்தைத் தூண்டில் போட்டு இழுக்கும் கண்களும் அவனுடைய கினேவிலே இப்போது கடமிடுகின்றன. அடிக்கு ஒரு தடவை அவன் இதழ்க்கடையில் புன்முறு வல் அரும்புகிறது. அவளுடைய இனிய குணங்களே நினைவுக்குக் கொண்டுவருகிருன். மெத்தென்று மொழி பேசி அன்பைக் காட்டித் தன் குறிப்பை அறிந்து வேண்டியவற்றைச் செய்துவைக்கும் திறத்தை எண்ணிப் பார்க்கிருன். எத்தனே வேலைகள் இருந்தா லும் சலிப்பின்றி முகங் கடுக்காமல் செய்துவிட்டுத். தன்னுடன் சிரித்துச் சிரித்துப் பேசும் அவள் பொறு மையை எண்ணி வியக்கிருன், அவன் எப்போதாவது சினங் கொண்டாலும் அதல்ை வருந்தாமல் அவ னுடைய உள்ளத்துக்கு ஏற்ற வகையிலே பழகி, காம் இவளே ஏன் கோபித்துக் கொண்டோம்' என்று அவனேயே இரங்கும்படிச் செய்யும் அவளுடைய உயர்ந்த பண்பு அவன் உள்ளத்திலே இப்போது தன் மையைப் பெய்தது.
விருந்தினர்களே உபசரிப்பதில் அவளுக்கு ஈடு அவள்தான். அவள் வீட்டு விஷயங்களைத் திருத்த மாக அமைக்கும் திறனும், வருவாய்க்கு ஏற்பச் செலவு செய்யும் மாட்சியும் அவனுடைய இல்வாழ்விலே அறம் பொருள் இன்பம் என்ற மூன்றையும் பெருக்கி வந்தன.
மறுபடியும் அவளுடைய எழிற்கோலம் கினேவுக்கு வங்தது. அவளுடன் கொஞ்சிப் பேசிய பேச்சுக்களை