பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

முரு :-தம்பி! உன் ஆர்வம் எனக்குப் புரிகிறது. என்றாலும் நான் இன்றைக்கு உடனே வேறு ஓர் இடத்திற்குப் போக வேண்டும். வேறு வேலை இருக்கிறது. நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கெல்லாம் வந்து விடு. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்த படியே எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லுகிறேன். ஒரு சிலவற்றை அந்தக் குறிப்புப் புத்தகங்களைப் பார்த்துத்தான் சொல்லவேண்டும். ஆகவே நாளைக் காலை எட்டு மணிக்குக் கட்டாயம் வீட்டுக்கு வந்துவிடு. என்ன வருகிறாயா?

இரா:-கரும்பு தின்னக் கூலியா? ஏழு மணிக்கெல்லாமே நான் உங்கள் வீட்டு வாயிற்படியில் நிற்பேன்.

முரு :-நல்லது சென்று வா! வணக்கம்.


இரா :-வணக்கம்.