பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. கருவின் தோற்றமும் வளர்ச்சியும்

{வீட்டுத் திண்ணையில் இராமனும் முருகனும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறவர்)

முருகன் :-தம்பி! நீ கெட்டிக்காரன். சொன்னபடி ஏழு மணிக்கே வந்து விட்டாய் போல் தெரிகிறது.

இராமன் :-ஆம்! வந்துவிட்டேன். எப்படி வராமல் இருக்க முடியும் உங்களிடம் ஒரு நல்ல பொருளைக் கேட்பது என்றால் ஓடிவராமல் நிற்பேனா! இரவெல்லாம் தூங்கவே இல்லை. பொழுது விடிந்ததும் ஓடிவந்து விட்டேன். இனித் தாங்கள் சொல்லாம் அல்லவா!

முருகன்:-நல்லது. என்ன கூறுவதாகச் சொன்னேன்?

இராமன்:-ஐயா. நான் மறந்து விட்டேன் என்று சோதிக்கிறீர்களா ? தாய் வயிற்றில் குழந்தை வளர்வதைப்பற்றிச்