பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14



சொல்லுவதற்காக அல்லவா என்னை வரச் சென்னிர்கள்.

முருகன்:-ஆம். உன் ஆர்வத்தை அறிந்தேன். இதோ சொல்லுகிறேன். கரு எப்படி உன்டாகிறது என்று யாருக்கும் சொல்ல வேண்டாம் அல்லவா. ஒர் ஆணும் பெண்ணும் கலப்பதால்தானே கரு உண்டாகிறது.

இரா:-ஆமாம்! ஆமாம்! இன்று அவ்வாறு கலக்காமலே கூடக் கரு உண்டாகிறது என்று சென்னையில் பேசிக் கொண்டார்களே.

முரு:-ஓ! அதுவா சென்னையில் பசுமாடுகளை அவ்வாறு கருத்தரிக்கச் செய்கிறார்கள். அதிலும் ஆண் கருவைத்தான் பெண்ணின் கருப்பைக்குள். செலுத்துகிறார்கள். இன்னும் மனிதனைப் பொருத்த வரையில் அந்த முறை நம் நாட்டில் வர