பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15

வில்லை. ஆண் பெண் கலப்பினாலே தான் கரு உண்டாகிறது.

முரு :-அப்படியா? சரிதான். முதலில் அக்கரு எப்படி உண்டாகிறது?

முரு :-பெண் வயிற்றில் கரு வளர்வதைத்தான் கணக்கெடுத்து இருக்கிறார்கள். ஆண்களிடம் அந்தக் கருத் துளி எப்போது உண்டாகிறது ; எத்தனை நாள் தங்குகிறது என்று திட்டமாக யாரும் இன்று சொல்லவில்லை. என்றா லும் பழைய காலத்துத் தமிழ் நூல் ஒன்று கருத்துளி இரண்டு மாதம் ஆண்களிடம் தங்கும் என்று சொல்லுகிறது. அது சரியா, தப்பா என்று நம்மால் சொல்ல முடியாது. அது பற்றி நாம் இங்கே பேச வேண்டாம். ஆணிடத்திலிருந்து அந்தச் சிறிய கருத்துளி பெண்ணிடத்தில் கரு அறையின் வாசல் வழியாகவும் கருக்குழாய் வழியாகவும் செல்