இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
முரு :-இல்லை. இல்லை. அப்படி உண்டாகாது. ஆமாம். நீ தவளை முட்டையைப் பார்த்திருக்கிறாயா?
இரா :-ஓ! நிறையப் பார்த்திருக்கிறேனே. கால்வாய்களில் அவை மிதக்குமே.
முரு :-சரி! அதிலிருந்து தவளைக் குஞ்சு முதல் முதல் உண்டாகும் போது எப்ப்டி இருக்கும் தெரியுமா?
இரா :-நன்றாக தெரியும். முன் தலை குண்டாகவும், பின் வால் நீளமாகவும் இருக்கும்.
முரு :-நீ சொல்வது சரிதான். நன்றாகப் பார்த்திருக்கிறாய். மனிதனுடைய கருவும் முதல் முதல் உருவம் பெறும் போது அப்படித்தான் இருக்கும். இதோ இந்தப் படத்தில் காண்பது போலவே இருக்கும்.