இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரா:-எனக்கு எப்படி ஐயா தெரியும்?
முரு:-சொல்லுகிறேன் கேள். கரு பெண்ணின் கருப்பைக்குள் புகும் பொழுது ஆறு நாட்களுக்கு உள்ளாகவே இந்த நிலையை அடையும். இதன் அளவு எவ்வளவு என்பதும் உனக்குப் புரியாது. தவளைக் குஞ்சு தண்ணீரில் நீந்துவது உன் கண்ணுக்குத் தெரிகிறது அல்லவா? இது அவ்வளவு சுலபமாகத் தெரியாது. வயிற்றில் இருப்பதால் மட்டுமல்ல; அதன் அளவும் அத்தனை மிகச் சிறியது. கரு பெண்ணின் கருப்பையை அடையும் போது பார்வைக்குத் தெரியாத அளவு மிகச் சிறியதாக இருக்கும். அளவு ‘பனியிலோர் பாதி' என்று சொல்லுவார்கள். இந்த ஆறாவது நாளில் கரு பெற்றிருக்கின்ற அளவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிருர்கள். அதன் நீளம் என்ன தெரியுமா? ஒரு அங்குலம்
2