பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



23

தாக இருகின்ற காரணத்தால் சாதாரணமாக அதைப் புரிந்து கொள்ள முடியாது. என்றாலும் பூதக்கண்ணாடி முதலியவற்றால் ஆராய்ந்து பார்த்தால் அந்த வால் போன்ற பகுதியில் பத்து அல்லது பன்னிரண்டு மெல்லிய நார். போன்ற பொருள் பின்னிக் கொண்டிருப்பதைக் காணலாம். அந்த நார்களைக் காண்பதற்கு பூதக் கண்ணாடி வழி அந்தக் கருவை 20,000 மடங்கு பெரியதாக்க வேண்டும் என்பார்கள். ஆம்; தெரிகிறதா? இருபதாயிரம் மடங்கு.

இரா:-அப்படியா? ஆமாம்: அந்தக் கரு உண்டாகி எத்தனை மாதம் கழித்துக் குழந்தை பிறக்கும்?

முரு:-நல்ல கேள்வி கேட்டாய். சாதாரணமாகப் பத்து மாதம்-என்று சொல்லுவார்களே, உனக்கும் தெரியுமே. என்றாலும் அந்த மாதங்கள் இன்றைய