பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40

தொழிலுக்குப் பயன்படும் நரம்புகளின் அமைப்பும் உருவாகும். அவை கண், காது முதலிய உறுப்புக்களை மூளையொடு சேர்க்கும். மூளையில் மூன்று அறைகள் இருக்கின்றன என்று உனக்குத் தெரியுமா? எப்படித் தெரியும் தெரிந்தாலும் பெயர்களைப் புரிந்து கொள்வது கடினம். என்றாலும் அவற்றை நாம் முன், பின், இடை அறைகள் என்றே வைத்துக் கொள்ளலாம், இம்மூன்றும் தனித்தனி அறைகளாக இருக்கும். ஒவ்வொன்றின் இடை யிலும் தோலால் ஆகிய இடைச் சுவர் உண்டு. ஒவ்வொன்றும் மனிதனுக்குத் தனித் தனிச் செயலாற்ற உதவுகிறது. இந்தச் சுவர்கள் ஐந்தாவது வார்த்துக்கும் பன்னிரண்டாவது வாரத்துக்கும் இடையில் இறுகிக் கடினமாகும். பிறகு அவைகளே நரம்பின் அமைப்புக்களை உண்டாக்குகின்றன. அவை தாம் மூளையைத் தொழில் படுத்தும் முதல் நரம்புகள்.