பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



41

இவைகளைக் கரு நரம்புகள் என்றே சொல்லுவார்கள். பிறகு எலும்புகள் உண்டாகும். அடுத்து உடம்பில் உள்ள மற்றைய நரம்புக் குழாய்களெல்லாம் உண்டாகும்.

இரா :-ஆமாம். இருதயம் எப்படி இருக்கும் !

முரு :-கேட்க வேண்டிய கேள்வி தான். இருதயம் நான்காவது வார்த்திலேயே உருவாகின்றது என்று சொன் னேன் அல்லவா! அதில் நான்கு அறைகள் உள்ளன. அவற்றை உடம்பின் பிற பாகங்களோடு இணைக்கும் இரத்தக் குழாய்கள் இதற்குள் உருவாகிவிடும்: இரத்தக் குழாய்களின் அமைப்புத்தான் பின்னால் உடம்பு நன்றாகத் தொழில்பட உதவுகிறது. இந்த இரத்த நாளங்கள் இரத் தக்குழாய்கள் எல்லாம் இருதயம் தோன்றிய நான்காம் வாரத்துக்கும் இந்தப்