பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



48

இன்றைக்கு என்னால் இதற்கு மேல் வாங்கிக் கொள்ள முடியாது.

முரு:-ஆமாம் நல்லதுதான். எல்லாவற்றையும் ஒரே நாளில் கற்றுக் கொள்ள முடியுமா?

இரா:-அதுதான் நன்கு எனக்கே தெரிகிறதே. நான் நாளைக்கு இதே வேளைக்கு இங்கு வந்தால் என் சந்தேகங் களைத் தீர்க்கமுடியுமா? ஐயா.

முரு :-நன்றாகத் தீர்க்கிறேன். நாளைக்கு நீ இங்கே வரவேண்டாம். நாளைக்கு எனக்குக் களத்து மேட்டில் வேலை இருக்கும். உனக்கும் வயலில் வேலை இருக்கும். ஆகையினால் அங்கே களத்து மேட்டுக்கே வந்துவிடு, பேசலாம்.

இரா :-நல்லது ஐயா. இன்று ஒரு பெரிய உண்மையை உங்களால் புரிந்து கொண்டேன்; வருகிறேன்.

முருகன்:-சென்று வா.