பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
III. ஐய விளக்கம்
(களத்துமேட்டில் முருகன், இராமன் இருவரும்)

முரு :-வா அப்பா! வா, உட்கார். வயல் பக்கம் சென்று வந்து விட்டாயா?

இரா:-ஆமாம், இப்போது நேராக வந்து கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் பார்த்து விட்டேன்.

முரு:-அப்படியா! நல்லது. நேற்று ஏதோ சந்தேகம் கேட்க வேண்டும் என்றாயே, அவற்றையெல்லாம் கேள். எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்.

இரா :-நேற்று நீங்கள் சொல்லியவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தேன். தாயின் வயிற்றில் வளரும் கருவின் மாற்றங்கள் தாம் எத்தனை! நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. ஆமாம் அக்கருவைப் பற்றியும் அதன் வேறுபாடுகள் பற்றியும் சில கேட்கலாமா?