பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50

முரு:-நன்றாகக் கேள். ஒவ்வொன்றாகக் கேள்.

இரா:-ஆமாம்,இப்படிக் குழந்தை பிறப்பதைப் பற்றிக் கூறினீர்களே! நம் நாட்டில் இவ்வாறு குழந்தை பிறப்பதில் பரம்பரைக் குணம் தொடர்ந்து வரும் என்று சொல்லுகிறார்களே, அது பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? இன்று யாராவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா?

முரு:-நல்ல கேள்விதான். ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும்படியாகவும் எழுதி இருக்கிறார்கள். நம் நாட்டில் பழைய காலத்துப் பெரியவர்கள் எப்படியோ எல்லாவற்றையும் தெரிந்துதான் வைத்திருந்தார்கள். பரம்பரைக் குணம் குழந்தைகளுக்கு வரும் என்று அவர்கள் சொன்னது உண்மைதான். மேல் நாட்டில் ஆராய்ச்சி செய்த பெரிய விஞ்ஞானி