பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



57

சொல்லி இருப்பதாக நேற்றுகூடச் சொன்னீர்களே. அவர்கள் விளக்கமாகச் சொல்லவில்லையா?

முரு:-ஆம், நானே உனக்குச் சொல்லலாம் என்று இருந்தேன். உன் நினைவை மெச்சுகிறேன். பழங்காலத்தில் நம் நாட்டில் இவை பற்றியெல்லாம் பலர் நன்றாக அறிந்திருந்தார்கள். ஆனாலும் நம் நாட்டில் எப்படியோ ஒரு கெட்ட எண்ணம் இருந்தது. அதாவது தாம் கண்ட இரகசியத்தை மற்றவர்களுக்குச் சொன்னால் பலிக்காது என்பதுதான். என்றாலும் ஒரு சிலர் இலைமறை காய் போல இந்தக் கருவில் வளரும் குழந்தையைப் பற்றிய உண்மைகளையெல்லாம் சொல்லி விட்டுத்தான் சென்றிருக்கிறார்கள்.

இரா:-அப்படியா! நல்லதாயிற்று. என்ன சொன்னார்கள்? யார்? எங்கு! எப்படி?