பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



58

முரு:-பொறு தம்பி பொறு. கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறாயே. அவசரப்படாதே. ஒரு சிலவற்றை உனக்குச் சொல்லுகிறேன். கருபெண்ணின் கருப்பையில் முதல்முதல் சென்று தங்கும்போது அதன் அளவு எவ்வளவு இருக்கும் என்று சொன்னேன்? நினைவிருக்கிறதா, சொல் பார்க்கலாம்.

இராமன் :-எல்லாம் நினைவில்லாவிட்டாலும். அது மட்டும் நினைவிலிருக்கும். இதோ குறித்தும் வைத்திருக்கிறேன். ஆம்-117 அங்குலம் இருக்கும் என்றீர்கள்.

முரு :-நல்லது சரியாகச் சொன்னாய். இதை நினைவு வைத்துக் கொள்வது கடினம். இதைப் பட்டினத்தடிகள் மிகவும் சுலபமாக மனதில் வைத்துக் கொள்ளும்படி, 'பனியிலோர் பாதி' என அளவிட்டுச் சொன்னார். பனித்துளி எவ்வளவு சிறியது? உனக்குத் தெரியுமே. அதில்