பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



60

என்று தம் தேவராத்தில் மிகவும் நன்றாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். இதை இன்றைய ஆராய்ச்சியோடு. பொருத்த வைத்துப் பார். எவ்வளவு திட்டமாக அவர் சொல்லி இருக்கிறார்,

இரா:-ஆமாம் ஆமாம். இன்னும் யார் யார் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள்?

முரு :-மாணிக்க வாசகரைப் பற்றி அறிவாய் அல்லவா. அவருடைய திருவாசகத்தில் எத்தனையோ விஞ்ஞானக் கருத்துக்கள் உள்ளன. அவர் ஒவ்வொரு மாதத்திலும் தாயின் வயிற்றில் கரு எவ்வெவ்வாறு மாறுதலடைந்து தப்பிப் பிழைத்து வருகின்றது எனக் காட்டுகின்றார் போற்றித் திரு அகவல் உனக்குத் தெரியுமே. அதில் பத்து வரிக்ளில் அவர் விளக்கி எழுதுகிறார்.