பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



61

இரா:-அப்படியா இன்னும் யாராவது விளக்கி எழுதி இருக்கிறர்களா?

முரு :-ஏன் இல்லை. திருமூலரைப் பற்றி நீ கேள்விப் பட்டிருப்பாயே, அவர் நாற்பத்தொரு பாடல்களில் இக்கரு உண்டாவதைப் பற்றியும், அது நாள்தோறும் வளரும் வளர்ச்சி பற்றியும் விளக்கி இருக்கிறார். ஒரு பாடலில் கரு ஆணா பெண்ணா என்று பிறக்கும் முன்னமே கூட அறிந்து கொள்ள முடியும் என்று காட்டியிருக்கிறார், அவருடைய பாடல்களுக்கு இன்னும் நல்ல விளக்கமாக உரை எழுதவில்லை. எழுதினால் உண்மைகளெல்லாம் நன்றாக விளங்கும். அப்போது இன்று கூறும் விஞ்ஞானிகளது ஆராய்ச்சிகளும் அவர்களது பாடல்களும் எவ்வாறு நன்றாகப் பொருந்துகின்றன என்றும் அறிந்து கொள்ள முடியும். நீ ஒய்வு இருக்கும் போது திருவாசகம், திருமந்திரம் முதலிய நூல்களைப் படித்து இவற்றை அறிந்துகொள்.