பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



62

இரா :-நல்லது. அப்படியே செய்வேன். அவைகளைச் சீக்கிரமே படித்து விடுகிறேன். ஆமாம் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே இவ்வளவு உண்மைகளைக் கண்டும் நம்மவர்கள் ஏன் அவற்றை வளர்க்காது விட்டார்கள் ?

முரு :-நான்தான் முன்னமே சொன்னேனே! எப்படியோ தாம் அறிந்த இரகசியத்தை மற்றவர்களுக்குச் சொன்னால் அது பலிக்காது என்றே நம்பி விட்டார்கள். அதனால் அவை இலை மறைகாய் போல் அமைந்து விட்டன. இன்று மேல் நாட்டவரோ தாம் கண்ட உண்மைகளை முதலில் உலகத்துக்கு அறிவித்து விடு கிறார்கள். அதற்கு ஏற்ப அச்சு, வானெலி போன்ற பல சாதனங்கள் இன்று உண்டாகிவிட்டன. நல்லது. எனக்கு வேறு வேலை இருக்கிறது. இன்னும் ஏதேனும் கேட்க வேண்டுமா?