பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



63

இரா:-எத்தனையோ இருக்கின்றன . கேட்க, என்றாலும் எல்லாவற்றையும் கேட்டுக் குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. அப்பப்ப! எத்தன எத்தனை உண்மைகள் அண்டத்துக்கும் அணுவுக்கும் நடுவில் மறைந்து கிடக்கின்றன.அவற்றையெல்லாம் மக்கள் என்றைக்கு அறிந்து கொள்வார்களோ!

முரு :-எல்லாவற்றையும் எல்லோரும் அறிந்து கொள்ளுவது அவ்வளவு சுலபம் அல்ல தான். என்றாலும் பெரிய பெரிய உண்மைகளையெல்லாம் மிக எளிமையாக எல்லாரும் புரிந்து கொள்ளும்படி சிலர் எளிய நூல்களை எழுதி வருகிறார்கள். அதற்குத் துணையாக நம் நாட்டில் அரசாங்கத்தார் நல்ல எளிய நூல்களுக்குப் பரிசு அளித்து ஊக்கம் அளிக்கிறார்கள். அதை நீயே இன்று சொன்னாயே.

இரா:-ஆமாம். ஆமாம், அறிவேன். அந்த நூல்களைக்கூட வாங்கி வந்தேன்.