பக்கம்:தாய்மை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வனசிச்சி 5

வோடு நின்றுவிட்டனவே. கவிதைதான் உள்ளத் தின் ஊற்றுப் பெருக்கு. உள்ளம் செம்மைப் பட்டவரே உயரிய கவிதைகள் இயற்றி மங்காப் புகழ் பெற்றுள்ளனர். நம் நாட்டில்-தமிழ் நாட் டில்-மிகு பழங் காலம் தொட்டு வரலாற்றிலே இ. வ் வு எண் ைம விவங்குகிறது. கவிதையை ஒரு கலையாக-உயிருள்ள மெய்க் கலையாக-வாழவைத்த உள்ளத்தால் நலம் ‘பரப்பிய நல்ல புலவர் ப்லர் வாழ்ந்து சென்றிருக் கின்றனர். முரஞ்சியூர் முடிநாகராயர் முதல், பாரதியார் வரையில் தமிழ் நாட்டில் வாழ்ந்து கவி பாடிய புலவர்களை வரிசையாக வைத்துப் பார்ப்பின், இவ்வுண்மை நன்கு விளங்கும். ஆங்கில நாட்டுப் புலவர்களையும், பிற நாட்டுப் புலவர்களையுங் கூட, இவ்வாறு ஆராய்ந்து காண்ன், உண்மை தோன்றும். கவிதை தோன்றும் இடமாகிய உள்ளம் சிறந்ததாக அமைய வேண்டும். தூய உள்னத்தே பெருகும் கவிதை உருப்பெற்று உருண்டு ஓடி வரும். அவ்வாறு வரும் கவிதைகள் வையத்தை வாழ வைக்கும் கவிதைகளாய் விளங்கும். இவற்றையெல்லாம் எண்ணித்தான் போலும் பாரதியார், :: உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்

வாக்கினிலே ஒளியுண்டாகும்: வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்

கவிப்பெருக்கும் மேவு மாயின் - பள்ளத்தில் வீழ்ந்திருக்த குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார், தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவைகண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார் ‘ என்று பாடினார். உண்மை இதுதான். எங்கே தூய. உள்ளம் உண்டோ, அந்த இடத்திலிருந்து கவிதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/117&oldid=684505" இலிருந்து மீள்விக்கப்பட்டது