பக்கம்:தாய்மை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி II 7

அவனுக்கு வாரி வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். நூலின் நயம் பயிலப் பயில மேலும் மேலும் இனிக்க வேண்டுமேயன்றிப் புளி க் க க் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது நல்ல பாடலுக்குகவிதைக்குப் பொருந்துவதன்று. அதைப் போன்றதே மற்றொன்றின் கருத்தும்; ஆனால் சற்று விரிந்து செல்வது. ஒன்றைப் பற்றி ஆய்ந்து ஆய்ந்து உண்மை காண மு ய ல் கி ன் றா ன்; ஆ ரா யு ம் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு புது உண்மை புலப்படுகின்றது. ஆனால், அந்த அளவோடும் அது நின்றுவிடவில்லை. அவன் ஒன்றைக் கூட அறிந்தாலும், அவன் அறியாது விட்டது முன்னையினும் இ ப் போது அதிகமாக அவனுக்குத் தெரிகின்றது. எனவே, அவன் அப்பொருளைப் பற்றி அதிகமாக அறிய அறிய அது பற்றிய அறியாத பகுதி மேலும் மேலும் பெருகிக்கொண்டே போகின்றது. வள்ளுவர் இந்த இரண்டு உவமைகளையும் நன்கு தேவை யான இடங்களில் அமைத்துள்ளார். நாம் அதைவிடுத்துக் கவிதை வழிக் கருத்தைச் செலுத்துவோம். ஆம். கவிதை என்பது பயில்தொறும் புத்தம் புதிய கருத்துக்களைப் பயில் வார்க்கு உண்டாக்கிக் கொண்டிருக்க வேண்டும், அதனுடன் அக் கவிதை பற்றி அதிகமாக அறிய அறிய, அதுபற்றி அறிய வேண்டுவன இன்னும் அதிகமாகிக் கொண்டே. செல்ல வேண்டும். இப்படிச் சென்றால், கவிதையின் முடிந்த பொருளைக் காண்பது எப்போது? கவிதையின் நிலையே அதுதான். கவிதையின் முடிந்த முடிபை ஒருவராலும் அறுதியிட முடியாது என்பதே உண்மைக் கவிக்கு இலக்கணமாகும். ஏன்? பாடும் கவிஞனே அதன் கருத்தை அளந்து ஆழங்காண முயலினும், முட்டாது சென்றுகொண்டே இருக்க வேண்டும். அத்தகைய கவிதை களைப் பாடுவோர் என்றும் வாழ்பவரே யாவர். அத்தகைய நூல்கள்-கவிதைகள்-நம் நாட்டில் உண்டா? ஏன் இல்லை! வள்ளுவர் திருக்குறள் ஒன்று போதுமே!.

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/119&oldid=965061" இலிருந்து மீள்விக்கப்பட்டது