பக்கம்:தாய்மை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கல்வியும் நாட்டுக் கல்வியும் 41

அப்படியே நாட்டுக் கல்வித் திட்டத்தில் அவற்றைப் புகுத்துவதோடன்றி அவற்றைச் செயல்படுத்த வழிவகை கள் வகுத்துத் தந்து, அவற்றின் வளர்ச்சிக்கு ஆவன செய்ய வேண்டும். உள்ள உணர்வோடு உயரிய கருத்தோடு இத்தகைய நிலையில் நாடகக்கலை போன்ற நாட்டுக் கலைகள் நாட்டுக் கல்வியில் இடம் பெறுமாயின் அது அனைவருக்கும் நன்மை பயப்பதாக அமையும். வருங்கால மாணவர் சமுதாயம் வாழ்த்தும்-வளம் பெறும். நல்லவர்கள் இந்த ஆக்கப் பணிக்கு வழி கோலுவார்களாக!

குறிப்பு :- இக் கட்டுரை எழுதி இருபது ஆண்டு களுக்கு மேல் நாட்டு வாழ்வு கழிந்தது. கல்வி மாநில நிலையிலன்றி மத்திய அரசும் அதில் பங்கு கொண்டுள்ளது . (ஒரு வேளை கல்வி மத்திய அரசின் கீழேயே வந்து விடுமோ எனவும் அஞ்ச வேண்டியுள்ளது) எனினும் இக்கட்டுரையில் அன்று நான் குறித்த அளவிலேயே . கலைகளைக் கல்வித் திட்டத்தில் புகுத்தும் முறையிலே-குறைந்த நிலையிலே செயலாக்கம் உள்ளது. அரசு சித்தித்துச் செயலாற்ற வேண்டும். செயலாற்றுமா? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/43&oldid=684816" இலிருந்து மீள்விக்கப்பட்டது