பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 னிரைத் துடைத்துக்கொண்டேன். கடவுள் போல அவள் மட்டும் கடந்த நாலு மாதமாக என்னுடன் இல்லையென் முல்...என்ருே பிறந்த நட்பு-அவளுக்குத்தான் நான் என்ருல் எவ்வளவு பிரியம்...! என்றென்றும் அவளுக்குக் கடமைப் பட்டவள் நான். ஆளுல் என்றென்றும் என்னுடன் உயிருக்குயிராக இருக்க வேண்டிய, இருக்கக் கடமைப்பட்ட, இருப்பதாக அக்கினி சாட்சியாக உறுதி சொல்லி என் கைத்தலம் பற்றிய என் புருஷன்- அவர் நிலை, தற்போதையப் போக்கு, அவர் ஆசை. முடிவு, எல்லாவற்றையும் விட அன்று என்னிடம் விருப்புடன் போட்ட அந்தச் சபதம்...! அம்மம்மா! ஐயையோ...! பெண்ணுகப் பிறந்தாலே எந்நாளும் துயர் தானே என்பதற்கு நான் ஒருத்திதான் எங்கள் வர்க்கத் தின் ஏகப்பிரதிநிதியாகி இருப்பேனே? மங்கையராகப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று எங்கள் பெருமையைப் பாடிய கவிமணியின் திருவாக்குக்கு நானும் பெருமை பூணும் பாக்கியம் பெற்றிருக்கப்படாதா? தெய்வமே! சபதம்: சபதமா அது? அன்று உண்டு முடித்துப் படுத்தவள்தான். ஆளுல் மறுநாள் உடம்பில் காய்ச்சல் கண்டது; காய்ச்சலும் சாதார னக் காய்ச்சலாக இல்லை. டபிள் நிமோனியா வேளைக்கு வேளை மருந்துக்கு மருந்து ஊசிக்கு ஊசி அவர் பணத்தை தண்ணீராகத்தான் செலவழித்தார். ஆபீஸில் கொடுத்த சம்பளப் பணம் டாக்டரிடம் கைமாறியது. வீட்டிலிருந்து துரது சென்ற தந்தியின் பலகை அவருக்கு 'பாங்க் டிராப்ட், ரூபாய் ஐநூறுக்கு வந்தது. பணம் வந்த மாயம் அறிந்து தானே என்னவோ, என் ஜூரமும் விஷமாக ஏறியது. நாட் கன் மாதங்களாயின. காய்ச்சல் முறைதவருமல் என்னைப் பற்றிக் கொண்டது. ஏறக்குறைய இரண்டாயிரம் ரூபாயை ஆம், என் கணவரின் அபராத உடல் உழைப்பையும், இடை