பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அவர் கண்களில் நீர் வழிய, 'மங்களம், நிஜமாக உனக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன்; உன்னை மனைவியாக அடைய பூர்வ ஜென்மத்தில் நான் மிக வும் புண்ணியம் செய்திருக்க வேணும். .' என்ருர் என்னை நோக்கிய வண்ணம். அந்த என் அதிபர்தான இன்று இப்படி என்னை விலக்கிவைத்து, வாழாவெட்டியாக்கச் சபதம் போட்டுச் சென்றிருக்கிருர்? ※ 来 宋 உச்சிப் பொழுது. கமலா மருந்து கொணர்ந்தாள். கையில் வாங்கியவள் குடிப்பதற்கு யோசித்தேன். அதே சடுதியில் எதிரே நோக்கி னேன். ஆ! என் தலை சுழன்றது; நான் சுழன்றேன். எதிரே நின்ற நிலைக்கண்ணுடியில் பிரதிபலித்த என் உருவத்தைப் பார்த்தேன். ரத்தமே அற்றுப்போய், பார்க்கவும் கூசும் முகத்துடன் குச்சி போன்ற வெறும் உயிர்க்கூட்டைத் தான் அப்பொழுது கண்ணுடியில் கண்டேன். அழுகை வெடித்துக் கிளம்பிற்று ரோஜாவாக இருந்த நான் எப்படி மாறிப் போய்விட்டிருக்கிறேன். ..! நான் உண்மையிலேயே மங்களம் தானு...? மது தீர்ந்து வெறுமையுடன் நிற்கும் மலர், தன்னைத் துறந்து வேறு மலருக்குத் தாவிச்செல்லும் வண்டைக் கண்டு பெருமூச்செறிய, அம்மலரைக் கண்டு நான் மனங்கலங்கிய தும் நினைவுக்கு வந்தது. அப்பொழுதுதான் எனக்குப் புரிய ஆரம்பித்தது என் கணவரின் மாற்றத்துக்கு-மாற்றம் போதித்த சபதத்துக்குக் காரணம்! என் கணவர் என்னைச் சீந்தாததன் காரணங்களை அப்போதுதான் என் பெண் நெஞ் சம் உணரத் தொடங்கியது. அனைத்துக்கும் காரணம் எனது அழகு முழுதும் தேய்ந்தழிந்து போனதுதான்..! இதைத் திரும்பவும் மனசில் நினைக்கும் போதில், என் ஆவி பிரித்துவிட்டால் போதுமென்றிருக்கிறதே..!அந்தோ..! . . . .” # ઝં 来 அந்தக் கதை கையில் பிரித்து வைத்திருந்த அந்தக் கதை என் நெஞ்சலைகளைப் புரட்டிவிட்டவாறு என் நினைவின் சுருதியாய் இயங்கிக் கிடந்தது.