பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

" கா! ... கா! ... கா! ... "

அது ஒரு பெரிய காடு. காட்டுக்கு உரிய சகலலட்சனங்களும் ஒருங்கே கிரம்பப் பெற்ற இடம் அது. விலங்குகளுக்குப் புகல் அளித்த விருட்சங்களுக்குப் பஞ்சமில்ல அங்கங்கே நீர் நிலைகளும் இருந்தன.

அந்தக் காட்டுக்கு அதன் பாரம்பரிய வழக்கப்படி அதிபதியாக இருந்தது சிங்கம் ஒன்று. அது மாரடைப்பால் திடீரென்று இறந்துவிட்டது. அது தனக்குப்பின் வாரிசு எதையும் விட்டுச் செல்ல வில்லை. ஆகையால, அந்தச் சிங்கராஜாவுக்கு ஏற்ற மதியூகமங் திரியாக இருந்த கரியே இப்போது அந்த ஆரண்யத்தை அரசாண்டது. ஆட்சி என்ருல் ரொம்பவும் கெடுபிடி அசல்நரிதர்பார் தான்!

அன்று தினம் கரி முடிசூட்டிக்கொண்ட திருநாள் நடந்தது. நரியார் தன இஷ்டப்படி தலையை