பக்கம்:திரவிடத்தாய்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(11) ஒருபொருட் பல சொற்களில் தமிழில் வழங்காத ஒன்றை வழங்கல் எ-டு: சொல் (த.) - பறை (ம.); கூப்பிடு (த.) - விளி (ம.) (12) ஆய் என்னும் வினையெச்ச வீறு ஆயிட்டு என வழங்கல் எ-டு:சிவப்பாய் - சிவப்பாயிட்டு. (13) நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை எ-டு:ஆயாள் (அவ் ஆள்), ஈ மூரி (இம் மூரி) (14) ஏவல் வினைகள் பெரும்பாலும் வியங்கோள் வடிவில் வழங்கல். எ-டு: தா-தரிக, தர.

(15) துணை வினை வேறுபாடு எ-டு: பறையுவான் கழியும் (சொல்ல முடியும்), பறையுவான் கழியுன்னில்ல (சொல்லமுடியாது). (16) செய்யும் என்னும் முற்று மூவிடத்தும் வழங்கல். எ-டு: ஞான், நீ, அவன் - போகும். (17) றன்னகரம் தந்நகரமாக எழுதப்படல் (18) வழக்கற்ற சொல் வழங்கல் எ-டு: கைநீட்டக் காசு, தம்பிராட்டி. (19) புதுச் சொற்கள் எ-டு: மேடி = வாங்கு, வெடிப்பி = துப்புரவாக்கு. (20) வினைமரபு வேறுபாடு எ-டு: முட்ட புழுங்ஙுக (அவிக்க), விளக்கு கெடுக்க (அணைக்க), முட்டுக் குத்துக (கொடுக்க), காலுற முறிக்க (வெட்டுக.), மடங்ஙி ( திரும்பி) வருக. குறிப்பு : சேரநாட்டுக் கொடுந்தமிழாகிய மலையாளத்திலுள்ள இருவகைத் தமிழ்ச்சொற்களையும் வழக்கு வீழ்த்தற்கும் மலையாளத்தார் தமிழ்ச் சொற்களைக் கடன்கொண்டு அதனால் அவர்க்கும் தமிழர்க்கும் தொடர்பு ஏற்படாதபடியும், ஆரியர் வடசொற்களை மிகுதியாய்க் கலந்து மலையாளத்தைக் கெடுத்துத் தமிழுக்கு மிக அயன்மைப்படுத்திவிட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/50&oldid=1430638" இலிருந்து மீள்விக்கப்பட்டது