பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நீத்தார் பெருமை 119 தவம் பெருக அறம்பெருகப் பொருள் பெருகத் தெருள் பெருகச் (சைவம் ஓங்கிச் சுவம் பெருக மனுநீதித் துறைபெருக கிறைபெருகச் சுருதி வாய்மை நவம்பெருகச் சரியாதி சதுட்டயங்கள் கனிபெருக ஞாலம் எல்லாம் சிவம் பெருகக் குறுகி.அருள் பெருகின்ை குற்ருலத் தேவ தேவன். (2) சித்தினல் கரும்பொன் மேனி செம்பொனம் படிபோல் கும்பன் பத்தியால் உருகி மாலாம் படிவனே பரமன் ஆன்ை: சத்துடன் அசத்தும் ஆகிச் சதசத்தும் ஆன ஞான கித்திய கிமலா னந்த கிட்கள சகள மூர்த்தி. (3) (திருக்குற்ருலத்தலபுராணம்) இதல்ை இவரது அற்புத சித்திகிலை அறியலாகும். கடல் பருகியது. விருத்திரன் என்னும் அசுரன் இந்திரனேடு பெரும் போர் புரிந்தான். முடிவில் ஆற்ருமல் கடலுள் புகுந்து மறைந்தான். அமரர்கோன் வருக்தி அகத்தியரை அ ைட ங் த உம்மதை உரைத்துத் தனது வெற்றிக்குவிரைந்த உதவிபுரியவேண்டினன். யாவையும் உணர்ந்த எங்தைக்கு யான் எடுத்து உணர்த்துகின்ற தாவதென் அமருக்கு ஆற்ருது ஆழிபுக்கு ஒளித்தான் ஆவி விவதும் அவல்ை வந்த விழுமநோய் எல்லாம் இன்று போவதும் கருதி நும்பால் புகுந்தனம் அடிகள் என்ருன். தேவராசன் இவ்வாறு கூறி வேண்டவே இம்மாதவர் ஊழிக்காலத்து உருத்திர மூர்த்தியைத் தியானித்து ஆழிநீரைக் கையில் ஏந்திக் கடிது பருகினர். அமரர் உற்ற அல்லலை நீக்கும் பொருட்டு அளவிடலரிய கடலை அளவு செய்து முற்றவும் இவர் ஒல்லையில் பருகியது எல்லையில்லாத வியப்பை எங்கும் விளைத்தது. என்றவன் இடுக்கண் தீர்ப்பான் இகல்புரி புலன்கள் ஐந்தும் வென்றவன் கெடியோன்தன்னே விடையவன் வடிவம்ஆக்கி கின்றவன் அறிவானந்த மெய்ம்மையாய் கிறைந்த வெள்ளி மன்றவன் ஊழிச் செந்தி வடிவினே மனத்துட் கொண்டான். (1) கைதவன் காந்து வைகும் கடலே வெற்படக்கும் கையில் பெய்து உழுந்து எல்லேத் தாக்கிப் பருகினுன் பிறைசேர் சென்னி ஐயனது.அருளைப் பெற்ருர்க்கு அதிசயம் இதுஎன்கொல் மூன்று வையமுத் தொழிலும் செய்ய வல்லவர் அவரே அன்ருே? (2) (கிருவிளையாடற்புராணம்)