பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செங்கோன்மை

141


ஓர்ந்து-ஆராய்ந்து; கண்ணோடல்-தாட்சண்யம் காட்டல், கருணையோடு பார்த்தல்; இறை-அரசன்; இங்கே நடுநிலைமை என்னும் பொருளில் வந்தது; முறை-நீதி நெறி.

செங்கோன்மை-செம்மை வாய்ந்த கோல் போல் எந்தப் பக்கமும் சாயாது நடுநிலைமையோடு இருத்தல். 541

2.வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.

உலகத்தில் உள்ள உயிர்கள் யாவும் மழையை நோக்கி உயிர் வாழ்கின்ற்ன. நாட்டில் உள்ள குடிகள் எல்லாரும் அரசனுடைய செங்கோலை (நீதி நெறியினை) எதிர்பார்த்தே வாழ்கின்றனர்.

வான்-மழை; உலகு-உலகில் உள்ள உயிர்கள்; கோல்-நீதி நெறி. 542

3.அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்ற்து மன்னவன் கோல்.

மேலுலக இன்பத்துக்காக ஞானிகள் எழுதிய தத்துவ நூலுக்கும், இல்லற் இன்பத்துக்காக அறிஞர்கள் இயற்றியுள்ள நீதி நூலுக்கும் முதற் காரணமாக இருப்பது அரசனுடைய செங்கோலே யாகும்.

அந்தணர்-செந்தண்மை உடையவர், ஞானிகள்; அந்தணர் நூல்- ஞான நூல்; அறம்-நீதி நூல். 543

4.குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

குடிமக்களை அன்போடு தழுவிக் கொண்டு, செங்கோல் செலுத்துகின்ற பேரரசனுடைய பாதங்களைத் தமக்கு அடைக்கலமாகப் பற்றிக் கொண்டு உலகில் உள்ள உயிர்கள் யாவும் நிலைத்து வாழும்.

அடிதழீஇ-பாதங்களைத் தமக்கு அடைக்கலமாகக் கொண்டு. (கடவுளுக்குச் சமமாக எண்ணி என்பது பொருள்.) 544