பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

திருக்குறள்



அருஞ் செவ்வி-காண்பதற்கு அருமையான காலம், கண்டு பேச முடியாத தன்மை; இன்னா முகம்-இனிமையற்ற முகம், சிடுசிடுப்பான முகம்; பேய் கண்டன்னது-பேயால் காக்கப்படும் செல்வம் போன்றது. 565

6.கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

ஒருவன் கடுமையான சொற்களைச் சொல்லுபவனாகவும், தாட்சண்யம் சிறிதும் இல்லாதவனாகவும் இருந்தால், அவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இன்றி அப்போதே அழிந்து விடும்.

கண்ணிலன்-கண்ணோட்டம் இல்லாதவன்; கண்ணோட்டம்-தாட்சண்யம். 566

7.கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

கடுமையான சொல்லும், அளவுக்கு மீறிய தண்டனையும் அரசனுடைய பகைவரை வெல்லும் வன்மையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

கையிகந்த-அளவுக்கு மேற்படுதல்; தண்டம்-தண்டனை; அடுமுரண்-(பகைவரை) வெல்லும் வலிமை. 567

8.இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகும் திரு.

ஒர் அரசன் தனக்கு இன்பமாக உள்ள அமைச்சர், சேனைத் தலைவர், பிற அறிஞர்கள் ஆகிய இவர்களோடு கலந்து ஆராயாமல், தனக்குள்ள சினத்தையே துணையாகக் கொண்டு பிறர் மேல் சீறி விழுவானானால், அவன் செல்வம் நாளடைவில் சுருங்கி விடும்.

இனம்-மந்திரி, புரோகிதர், சேனாதிபதி, தூதர், சாரணர் ஆகிய ஐவகை அரசியல் தலைவர்கள்; ஆற்றி எண்ணுதல்-கலந்து ஆராய்தல்; சிறுகும்-சுருங்கும். 568

9.செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.