பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

திருக்குறள்



அரண்-பகைவரால் துன்பம் நேர்ந்த போது அரசனுக்கும், சேனைக்கும் பிறருக்கும் பாதுகாப்பாக இருப்பது; ஆற்றுபவர்- பகைவர் மேல் படையெடுத்துச் செல்பவர்; போற்றுபவர்- தம்மைப் பாதுகாத்துக் கொள்பவர். 741

2.மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.

மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிழலும், மலையும், அழகிய நிழலையுடைய காடும் உடையதே அரணாவது.

நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் ஆகிய இவை நால்வகை அரண்களாகும். 742

3.உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

உயர்வு, அகலம், உறுதி, பகைவர் அணுகுவதற்கு அருமை ஆகிய இந்நான்கும் பொருந்தியதே அரண் என்று நூலோர் கூறுவர்.

உயர்வு-ஏணியாலும் அடைய முடியாது; அகலம்-அடிப் பாகம் அகன்றிருத்தல்; திண்மை-உறுதி; அருமை-பொறி முதலியவைகளால் நெருங்க முடியாத அருமை; இது மதிலரணின் சிறப்புக் கூறுகிறது. 743

4.சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.

பெரிய இடத்தை உள்ளடக்கிக் காக்க வேண்டிய இடம் சிறியதாய்த் தன்னை எதிர்த்து வந்த பகைவர் தம் ஊக்கத்தைக் கெடுக்க வல்லது அரண் ஆகும்.

சிறுகாப்பு-காக்க வேண்டிய இடம் சிறியதாய் இருத்தல்; ேரிடம்-கோட்டைக்குள் இருப்போர் துன்பின்றி இருத்தற்குரிய அகன்ற இடம். 744

5.கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.