I 6 8 திருக்குறள் உடம்பெனவேt ஒளதாரிகம் முதலிய ஐவகையுள்t உரு உடம்பு அருஉடம்பு என இரண்டு வகைப்படும். அவற்றுள் உரு உடம்பாவது* தசப்பிராணனோடு கூடியது. பத்துவகைப் பிராணனாவது; இந்திரியங்கள் ஐந்து கரணம் மூன்று, உச்வாச நிச்வாசம் ஒன்று, ஆயுஷ்யம் ஒன்று கதிகள் தோறும் ஆத் மனை விட்டுப் பிரியாமல் அதனோடு செல்லும் சரீரம் கார்மண சரீரம் அல்லது குசுமதேகம் அல்லது அருஉடம்பு எனப்படும். சரீரத்தின்மேல் ஆசைவைத்தால் பிறவி அறாமல் துக்கம் வந்து சேரும்; இதன்மேல் ஆசையை சுண மாத்திரமும் வையாம லிருந்து மோட்சத்தை அடைகின்றது அருகரது மதம்" என்ற வாறு குறிப்பு t ஒளதாரிகம் முதலாகிய ஐவகையுள் t என்பன. காகிதச் சுவடியில் அடிக்கப்பட்டுள்ளன. 'தசப்பிரணனோடு' என்பது முதல் ஆயுஷ்யம் ஒன்று*, என்பது வரை அடிக்கப்பட்டுப் பின் வருபவை எழுதப் பட்டுள்ளன: பத்துவகை இந்திரியங்களும் ஐந்துவகை வாயுக்களுடன் கூடி காம விகாரங்களோடு கூடிய மனம். இதனை சூட்சும தேகம் என்று சொல்லுவர்கள். இதன் மேல் ஆசையெல்லாம் பிறவி யருமற்றுகம் வந்து சேரும். 'கதிகள்தோறும்’ என்பது முதல் 'வந்து சேரும் ! என்பது வரை அடிக்கப்பட்டுள்ளன.
- அருகரது மதம்** என்பதில் 'கரதுமதம்” என்பது அடிக்கப்பட்டு 'உடம்பாம்' என்பது எழுதப்பட்டுள்ளது. டு
346. யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும் என் புது தானல்லாத உடம்பைத் தான் என்றும், தன்னோடு கூடாத பொருளை எனது என்றும் கருதி அவற்றினிடத்திலேயே ஆசை உண்டாக்கப்பட்ட மயக்கத்தைக் கெடுத்தவன், தேவர்களுக்கும் புகுதற்கரிதாகிய மோட்சத்தை அடைவன் என்றவாறு. 2. வைக்கிறத்துக்கு என்று காகிதச் சுவடியில் உளது