506
திருக்குறள்
1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போற் றோன்றி விடும்
என்பது, ஸ்திரீகள் காமம் மறைக்கப்படும் என்றவளுக்குச் சொல்லியது:
இந்தக் காமத்தை யான் என்னுள்ளே மறைக்க நினையா நின்றேன்; அது நில்லாமல் தும்மல் போல வெளிப்பட்டுவிடுகின்றது என்றவாறு. ௩
1254. நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்
என்பது இதுவுமது
யான் நிறையுடையேன் என்றிருப்பேன்; அப்படியிருக்கவும் இன்று என்காமம் மறைக்கிறதைக் கடந்து வெளிப்படாநின்றது என்றவாறு.
மன்று படுதல் - பலரு மறிதல் ௪
1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ
யுற்றா ரறிவதொன் றன்று
என்பது[1]
தம்மை விட்டுப் போனார் பின்னே போகாது, தாமும் விட்டுப் பிரிந்து நிற்கும் நிலைமை, காம நோயினை யுறாதார் அறிவதல்லாமல், காம நோயினை யுற்றவர்கள் அறிவதொன்றன்று என்பதாம். பின்செல்லுகிறதாவது, விடாமல் நினைத்திருக்கிறதாம். ௫
1256. செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
எற்றென்னை யுற்ற துயர்
என்பது
என்னைவிட்டுப் பிரிந்தார் பின்னே நான் போக வேண்டுதலால், என்னை அடைந்த துயர் மிகவும் நன்றென்றவாறு.
- ↑ இங்கும் அடுத்த குறட்கும் பரிமேலழகர் தந்த துறைக்குறிப்பு இல்லை