இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2 11 102. நாணுடைமை
கருமத்தால் நாணுதல் நாணுத் திருதுதல் நல்லவர் நாணுப் பிற jí}}
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. I()12
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு. 1013
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணியன்றோ பீடு நடை 1014
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நானுக்கு உறைபதி யென்னும் உலகு. 1075
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். 1016
நானால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர். 10|7
பிறர்நாணத் தக்கது தான்தாணான் ஆயின் அறம்நாணத் தக்கது உடைத்து. 1018
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை 101.9
நாணகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நானால் உயிர்மருட்டி யற்று. 1020