இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
221 107. இரவச்சம்
கரவாது உவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும். |{}6?
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். f{}62
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில், 106.3
இ. மெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. 1064
தெண்ணிர் அடுபுற்கை யாயினுந் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில் 106S
ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில் f{}66
இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. 1067
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். 1068
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளது.உம் இன்றிக் கெடும். 1069
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர் 107()